Sunday 25 January 2015

யாழ்ப்பாணத்தின் நிலத்தடி நீர் அதுபற்றிய பிரச்சனைகளை அறிவோம்!

யாழ்ப்பாணத்தின் நிலத்தடி நீர் அதுபற்றிய பிரச்சனைகளை அறிவோம்!
தற்போது மிகப்பாரிய பிரச்சனையாக சூழலியலாளர்கள், சமூக ஆர்வலர்களால் சுன்னாக நிலத்தடி நீர் கழிவு எண்ணெய் கலப்பு பேசப்பட்டுக்கொண்டு இருக்கும் இவ்வேளையில் இந்த பிரச்சனையினை ஆழமாக புரிந்து கொள்ளும் நோக்காக யாழ்ப்பாணத்தின் நிலத்தடி நீர் அமைவியல் பற்றி சற்று இந்த கட்டுரையில் பார்ப்போம்.
நிலத்தின் அடியில் நீரினை சேமித்து வைக்கும் பூமியின் பாகத்தினை ஆங்கிலத்தில் aquifer என்றும் தமிழில் நீர்கொள் படுகை என்று கூறலாம். இந்த படுக்கை நீர் உட்புகக்கூடிய கற்களால் அல்லது கிரவல், மணல் போன்ற நுண்ணிய துநிக்கையால் ஆக்கப்படிருக்கும். இவற்றினை குறித்த நாடுகளுக்கு ஏற்ப நீர் ,நிலவியல் அறிவியலாளர்கள் வகைப்படுத்தி இருப்பார்கள். இந்த வகையில் இலங்கையில் காணப்படும் நீர்ப்படுக்கைகளை ஆறுவகையாக (C.RPanboke, என்ற அறிவியலாளர்) வகைப்படுத்தி இருக்கிறார். இந்த ஆறுவகை நீர்ப்படுக்கைகளில் யாழ்ப்பாணத்தில் காணப்படும் நீர்ப்படுக்கை மிக விசேடமானதும், தனித்துவமானதுமான ஒன்றாகும். இதனை Shallow Karstic Aquifer என்று குறிப்பிடுவர். இதனை தமிழில் ஆழமற்ற துவாரங்கள் கொண்ட நீர்ப்படுக்கை என தமிழில் கூறலாம்.

முழு யாழ் குடாநாட்டின் நிலத்தடி அமைப்பும்  Miocene limestone எனப்படும் சுண்ணக்கல் பாறைகளால் ஆக்கப்பட்டுள்ளது. இந்த பாறைகள் இடையிடையே karsts எனப்படும் துவாரங்கள் கொண்டவை. இவற்றின் சராசரி ஆழம் 100 – 150 m ஆகும். இந்த துளைகள் ஒன்றுடன் ஒன்று தொடர்பு பட்டவை. இதனால்தான்  நிலாவரை கிணறு வற்றாமல் நீர்கிடைப்பது, நிலாவரை கிணற்றில் எலுமிச்சை போட்டால் கீரிமலை கேணியில் கிடைக்கும் என்ற ஊர்வழக்கு கதைகளில் உள்ள உண்மை இதுதான்.

இந்த அமைப்புதான் இன்றைய கழிவு எண்ணெய் பிரச்சனைக்கும் காரணம். கீழ்வரும் மாதிரி உருப்படத்தின் மூலம் வாசகர்கள் இதனை தெளிவாக புரிந்து கொள்ளலாம்.
இங்கு கழிவு எண்ணெய் மட்டும்தான் பிரச்சனையா? என்றால் நைத்திரேற்று, பூச்சிகொல்லி என்பன அனுமதிக்கப்பட்ட அளவை தாண்டி மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் அளவுக்கு அதிகமாக இருக்கின்றது என்று யாழ்பல்கலைக்கழகம், நீர் வள சபை ஆகியன செய்த ஆய்வுகளில் தெரியவந்துள்ளன.

ஆக மேலும் யாழ்குடாநாட்டிற்குள் நிலத்தில் கழிவுகள் புதைத்தல், இரசாயன உரப்பாவனை என்பனவும் மறைந்திருந்து அச்சுறுத்தும் காரணிகள்!

வழமையான எமது மனபாங்கான தலைக்கு மேல் வந்தபின்னர் அவன்தான் காரணம், இவன்தான் காரணம் என்று ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி காரணம் சொல்லிக்கொண்டு இருப்போம்.

இதுபற்றி யாழ்பல்கலைகழகம், புத்தி ஜீவிகள், அரசியல்வாதிகள், அதிகாரிகள், 

No comments:

Post a Comment